மட்டக்களப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

மட்டக்களப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

Editor 1

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தில் அண்மைக் காலமாக சட்டவிரோதமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது . 

வவுணதீவு பொலிஸ்  நிலைய குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் பொலிஸ் விஷேட புலனாய்வு பிரிவின் இரகசிய தகவலுக்கமைவாக  இந்த கசிப்பு உற்பத்தி நிலையம் இன்று ஞாயிற்றுக்கிழமை (09) முற்றுகையிடப்பட்டது . 

இந்த பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சேனை ஆற்றை அண்டிய காட்டுப் பகுதியில்  இந்த கசிப்பு உற்பத்தி நிலையம் சட்டவிரோதமாக இயங்கி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் . 

இதன்போது சந்தேகத்தின் பேரில் 22 வயதுடைய அதே பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் இந்நடவடிக்கையில்,  5  பீப்பாய்  கோடா மற்றும்  கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பதார்த்தங்கள் , 150 போத்தல் கசிப்பு, கசிப்பு தயாரிக்க பயன்படுத்தும் சில உபகரணங்கள் உள்ளிட்டவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக  பொலிஸார் தெரிவித்தனர் .  

Share This Article