அரசாங்கத்தின் நிதி நடவடிக்கைகளுக்கு எதிராக மனு!

அரசாங்கத்தின் நிதி நடவடிக்கைகளுக்கு எதிராக மனு!

Editor 1

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பொருளாதார மாற்ற சட்டமூலம் மற்றும் பொது நிதி முகாமைத்துவ சட்டமூலம் என்பவற்றின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை என உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சர்வ மக்கள் சக்தி என்ற அமைப்பினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன் பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார்.

குறித்த உத்தேச சட்டமூலங்களின் ஊடாக நாடாளுமன்றத்தின் நிதி அதிகாரம் ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்படும் என அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share This Article