தேர்தலை ஒத்திவைக்க மீண்டும் வலியுறுத்துகிறது ஐ.தே.க!

தேர்தலை ஒத்திவைக்க மீண்டும் வலியுறுத்துகிறது ஐ.தே.க!

Editor 1

‘ஜனாதிபதி தேர்தல், பொதுத்தேர்தல் என்பன ஈராண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நான் தொடர்ந்து இருக்கின்றேன். இது விடயம் தொடர்பான எனது அறிவிப்பில் தவறு இருப்பதாக உணரவில்லை.’ – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார மீண்டும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறுநாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்காலத் தைக் கருத்திற்கொண்டே நான் இந்த அறிவிப்பை விடுத்தேன்.

அது சரியான – அதேபோல அறிவிக்க வேண்டியதொரு கருத்தாகும். அப்படியானதொரு கருத்தை வெளியிட்டதால் நான் மனக் கவலையில்
இல்லை.

நாட்டுக்கு தேவையானதொரு விடயத்தையே நான் கூறியுள்ளேன்.

அதேவேளை, தமிழ்பேசும் கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளும் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி பதவியில் தொடர வேண்டும் என்பதையே விரும்புகின்றன – என்றார்.

Share This Article