சீரற்ற வானிலையில் மாற்றம்!

சீரற்ற வானிலையில் மாற்றம்!

Editor 1

தென்மேற்கு பருவப் பெயர்ச்சியினால் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை தற்காலிகமாக இன்று (04) முதல் குறைவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  

மத்திய, சபரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். 

அத்துடன் இலங்கையின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில், மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

கடற் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 ‐ 35 கிலோமீற்றர் வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும். 

பலத்த காற்றும், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Share This Article