சட்டவிரோதமாக தலைமன்னார் வந்த ஐவர் கைது!

சட்டவிரோதமாக தலைமன்னார் வந்த ஐவர் கைது!

Editor 1

இந்தியாவில் இருந்து படகு மூலம் சட்ட விரோதமான முறையில் தலைமன்னாருக்கு வருகைத் தந்த இலங்கையைச் சேர்ந்த 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைமன்னார் ஊர்மனை கடற்கரை பகுதியில் வைத்து அவர்கள் இன்று காலை கைதாகியுள்ளனர்.

குறித்த 5 பேரும் கடற்படையினரின் விசாரணைக்குப் பின்னர் தலைமன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதானவர்கள் மன்னார், தாழ்வுபாடு, தலைமன்னார், வவுனியா, கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

24 மற்றும் 38 வயதுகளுக்கு இடைப்பட்ட ஐந்து பேரே இவ்வாறு கைதாகியுள்ளனர்.

குறித்த 05 பேரும் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடந்த சில வருடங்களுக்கு முன் சென்றுள்ள நிலையில் அங்கு பல்வேறு இடங்களில் வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையிலே குறித்த 05 பேரும் சட்ட விரோதமான முறையில் படகு மூலம் இந்தியாவில் இருந்து தலைமன்னார் ஊர்மனை பகுதிக்கு வருகைத் தந்துள்ளனர்.

குறித்த ஐந்து பேரும் விசாரணைகளின் பின்னர் மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Share This Article