ஊர்காவற்றுறையில் சிறார்கள் இருவரின் சடலங்கள் மீட்பு!

ஊர்காவற்றுறையில் சிறார்கள் இருவரின் சடலங்கள் மீட்பு!

Editor 1

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னமடு பகுதியில் நீர் நிரம்பிய குட்டை ஒன்றில் இருந்து சிறுவர்கள் இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

5 மற்றும் 11 வயதுடைய சிறுவர்கள் இருவரின் சடலங்களே இவ்வாறு நேற்றிரவு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சிறுவர்கள் இருவரும் துவிச்சக்கர வண்டியில் அருகிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்குச் சென்றிருந்த நிலையில் இந்த சம்பவம் நேர்ந்துள்ளது. 

குறித்த 2 சிறுவர்களையும் காணவில்லை என தேடிய பெற்றோர், சிறிது நேரத்தின் பின்னர் அவர்கள் பயணித்த வீதிக்கு அருகிலுள்ள நீர் நிரம்பிய குட்டை ஒன்றிலிருந்து அவர்களின் சடலங்களை கண்டெடுத்துள்ளனர். 

இந்த நிலையில் சிறுவர்கள் இருவரும் துவிச்சக்கர வண்டியில் இருந்து தவறுதலாக விழுந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

சடலங்கள் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Share This Article