யாழ்.பொது நூலகம் எரிப்பு; 43 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

யாழ்.பொது நூலகம் எரிப்பு; 43 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

Editor 1

தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய நூலகமாக திகழ்ந்த யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டு நேற்றுடன் 43 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவு கூரும் நினைவேந்தல் யாழ். பொது நூலகத்தில் நேற்று இடம்பெற்றது.

யாழ். மாநகர சபையின் ஆணையாளர் ச. கிருஷ்ணேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தலில் யாழ்.பொது நூலகத்தின் பிரதம நூலகர் சிவகரன் அனுசியா, நூலக ஊழியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

நூலகம் எரிக்கப்பட்ட போதும் அதனுடன் தொடர்புடைய வன்முறைகளின் போதும் உயிரிழந்தவர்களுக்கு சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Share This Article