திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் – நிமல் லான்சா!

திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் - நிமல் லான்சா!

Editor 1

ஜனாதிபதித் தேர்தல் இந்த ஆண்டு திட்டமிட்டபடி நடத்தப்படும். அதனை ஒத்திவைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று ஆளும் தரப்பை சேர்ந்த நிமல் லான்சா எம். பி. தெரிவித்துள்ளார்.

தேர்தலை உரிய நேரத்தில் நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விருப்பம் தெரிவித்துள்ளார் என்று லான்சா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அரசமைப்பு சட்டத்தின்படி இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடை பெறும் – என்றார். ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தேர்தல்களை ஒத்திவைப்பது தொடர்பில் கருத்து வெளியிட்டமையை தொடர்ந்து நிமல் லான்சா இந்த அறிக்கையை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Share This Article