யாழில் உண்டியல் உடைத்து திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது!

editor 2

யாழ்ப்பாணம் ஆவரங்கால் சிவன் ஆலயத்தில் உண்டியல் உடைத்து திருட்டில் ஈடுபட்ட சந்தேகநபரொருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ஆலயத்தில் திருடிவிட்டு மற்றொரு ஆலயத்தில் திருட முற்பட்ட போதே சந்தேகநபர் அச்சுவேலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து திருடப்பட்ட பணமும் சில பொருட்களும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு பின்னர் சந்தேகநபரை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share This Article