வெளிநாட்டவர் தவறவிட்ட பெருந்தொகைப் பயணத்தை கையளித்த அரச பேருந்து நடத்துனர்!

வெளிநாட்டவர் தவறவிட்ட பெருந்தொகைப் பயணத்தை கையளித்த அரச பேருந்து நடத்துனர்!

Editor 1

வெளிநாட்டவர் ஒருவர் பெருந்தொகை பணத்துடன் தவறவிட்ட பணப் பையை கண்டெடுத்து கையளித்த பருத்தித்துறை பேருந்து நடத்துனரை பலரும் பாராட்டியுள்ளனர்.

வட பிராந்திய போக்குவரத்து சபை – பருத்தித்துறை சாலையில் நடத்துனராக கடமையாற்றும் பா. பாலமயூரன் என்பவரே இவ்வாறு பாராட்டப்பட்டுள்ளார்.

பருத்தித்துறையிலிருந்து கொழும்பு நோக்கி நேற்றுமுன் தினம் காலை 8.30 மணிக்கு புறப்பட்ட பேருந்தில் வெளி நாட்டவர் இருவர் அநுராதபுரத்துக்கு பயணித்தனர்.

அநுராதபுரத்தில் அவர்கள் இறங்கிய பின்னர், கடவுச்சீட்டுகள், ஒரு இலட்சத்து 20 ஆயிரத்து 840 ரூபாய், 300 யூரோஎன்பவை கொண்ட பணப்பையை அவர்கள் தவறவிட்டுச்சென்றனர்.

இதனை கண்டெடுத்த நடத்துனர் அதிகாரிகள் மூலமாக அந்தப் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தார்.

அவரின் இந்த நேர்மையான செயலுக்கு பலரும் பாராட்டை தெரிவித்தனர்.

Share This Article