40 பாகையை கடக்கப்போகும் வெப்ப அதிகரிப்பு – நா.பிரதீபராஜா எச்சரிக்கை!

40 பாகையை கடக்கப்போகும் வெப்ப அதிகரிப்பு - நா.பிரதீபராஜா எச்சரிக்கை!

Editor 1

வடக்கு, கிழக்கில் நாளை முதல் எதிர்வரும் மே 12ஆம் திகதி வரை வெப்பநிலை தற்போதைய நிலையை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வெப்ப அலை சுட்டெண்ணின் ஆபத்தான வைகப்பாட்டுக்குள் இருக்கும் ஆபத்துள்ளது.

30ஆம் திகதியின் பின்னர் வெப்ப நிலை பகல்பொழுதில் 40 பாகை செல்சியஸூக்கு மேலாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. – இவ்வாறு யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல்துறையின் மூத்த விரிவுரையாளர் நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் தற்போது காணப்படும் அதிகரித்த வெப்பநிலை இந்த மாதத்தின் இறுதி நாட்களிலும் (நாளை முதல்) அடுத்த மாதத்தின் ஆரம்ப நாட்களிலும் குறிப்பாக மே 12ஆம் திகதி வரை தற்போது உள்ளதை விட உயர்வாக இருக் கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்ப அலை சுட்டெண்ணின் ஆபத்தான வகைப்பாட்டுக்குள் நாம் இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் 30ஆம் திகதிக்கு பின்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பகல் பொழுதின் அதி கூடிய வெப்பநிலை 40 பாகை செல்சியஸூக்கு மேலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் காலத்தில் உணரக்கூடிய வெப்பநிலையின் அளவு உண்மையான வெப்பநிலையை விடவும் உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை இந்துக்களின் பஞ்சாங்கம் காண்டாவனம் அல்லது அக்கினி நாள்/அக்கினி நட்சத்திரம் என்பது எதிர்வரும் மே 04ஆம் திகதி சனிக்கிழமை முதல் மே 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை நிலவும் என குறிப்பிடுகின்றது (காண்டாவனம்/அக்கினி நாள்/அக்கினி நட்சத்திரம் என்பது பரணி நட்சத்திரத்தின் 3ஆம், 4ஆம் பாதங்களையும் (கால் எனவும் குறிப்பிடுவர்) கார்த்திகை நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களையும், ரோகிணி நட்சத்திரத் தின் முதலாம் பாதத்தையும் சூரியன் கடக்கும் நாட்களே ஆகும்).

கடந்த சில நாட்களாக இரவு பொழுது வளிமண்டல சார் கிழக்கு மாகாணங்களின் ஆவியாக்க அளவு உயர்வாக உள்ளது. இது மேலும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது. எனவே எமது நீர்ப்பயன்பாட்டை வினைத்திறனாக மேற்கொள்வது சிறந்தது. இன்று முதல் 30ஆம் திகதி வரை வடக்கு மாகாணத்தின் சில இடங்களில் பிற்பகலுக்கு பின்னர் மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

எனினும், இந்த மழை அதிகரித்த வெப்பமான வானிலையை தணிக்க போதுமானதல்ல. எனவே, இக்காலப்பகுதியில் பாடசாலைகளில் மாணவர்களின் உடற் பயிற்சி மற்றும் விளையாட்டு செயல்பாடுகளை தவிர்ப்பதுடன், நோயாளர்கள், வயதானவர்கள், விசேட தேவையுடையவர்கள் பகல் பொழுது பிரயாணங்களை தவிர்ப்பது சிறந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

Share This Article