எலிக்காய்ச்சல் தொற்றுக்குள்ளான இளைஞர் ஒருவர் வவுனியாவில் உயிரிழந்துள்ளார் என்று உடற்கூற்று பரிசோதனை ஊடாக தெரியவந்துள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது.
வவுனியா செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞருக்கு சில தினங்களாக காய்ச்சல் இருந்துள்ளது. இதனையடுத்து செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக அங்கிருந்து வவுனியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞர் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.
இதன்பின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையில் குறித்த இளைஞன் எலிக்காய்சல் காரணமாக மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.