நகைச்சுவை நடிகர் போண்டாமணி காலமானார்! மன்னாரை பூர்வீகமாகக் கொண்டவர்!

editor 2

தென்னிந்திய திரைத்துறையின் நகைச்சுவை நடிகரும் இலங்கையின் மன்னார் மாவட்டத்தினைப் பூர்வீகமாகக் கொண்டவருமான போட்டா மணி கடந்த இரவு காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழக்கும் போது அவருக்கு வயது 60.

போண்டா மணி 1991-ம் ஆண்டு வெளியான ‘பவுனு பவுனுதான்’ என்ற பாக்யராஜ் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். 

அதைத்தொடர்ந்து சிறிய கதாபாத்திரம் தொடங்கி காமெடி நடிகராக பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றார். குறிப்பாக ‘சுந்தரா டிராவல்ஸ்’, ‘மருதமலை’, ‘வின்னர்’, ‘வேலாயுதம்’, ‘ஜில்லா’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

2019-ம் ஆண்டு வெளியான ‘தனிமை’ படத்தில் நடித்திருந்தார்.

வடிவேலு உடன் இவர் சேர்ந்து நடித்திருந்த பல்வேறு நகைச்சுவை காட்சிகள் கவனம் பெற்றன.

கடந்த ஆண்டு சிறுநீரக பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் கடந்த இரவு இரவு 11.30 மணியளவில் பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூரில் உள்ள தனது வீட்டில் நடிகர் போண்டா மணி திடீரென மயங்கி விழுந்துள்ளார். 

அவரை அவரது உறவினர்கள் அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு நோயாளர் காவு வண்டி மூலம் அழைத்துச் சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

Share This Article