புயல் பாதிப்பால் தமிழகத்தில் 10 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு!

editor 2

மிக்ஜம் புயலால் தமிழகத்தில் மட்டும் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மற்றும் வியாபார இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது மிக்ஜம் புயல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தாக்கியது. கனமழையால் சுமார் 2 இலட்சம் வீடுகளுக்குள்
வெள்ளம் புகுந்தது.

பல இடங்களில் தரை தளம் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியதால் மின் இலத்திரனியல் பொருட்கள் நாசமாகின. அத்துடன், மோட்டார் சைக்கிள், கார்கள் என பல வாகனங்களும் நீரில் மூழ்கின.

இதனிடையே பல தொழிலகங்கள் நீரில் மூழ்கியதால் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

சிறுகடைகள், நிறுவனங்களில் புகுந்த வெள்ளத்தால் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் அழிவடைந்தன. 8 ஆயிரம் ஹோட்டல்கள் நீரில் மூழ்கியதால் சுமார் 700 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தது.

Share This Article