அனுமதிப் பத்திர முறைமையின் கீழ் இந்திய மீனவர்களுக்கு இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதி?

editor 2

இந்திய மீனவர்களுக்கு அனுமதிப்பத்திர முறைமையின் கீழ் இலங்கை கடலுக்குள் பிரவேசிப்
பதற்கு அனுமதி வழங்குமாறு இந்தியா யோசனையொன்றை முன்வைத்துள்ளது. எனினும்,
இது தொடர்பில் உடன்படிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்திய மீனவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் கடந்த ஆண்டு கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வரையறுக்கப்பட்டளவில் அனுமதிப்பத்திரங்களை இந்திய மீனவர்களுக்கு வழங்குமாறும், அதற்கான கொடுப்பனவை செலுத்துவதாகவும் யோசனையொன்றை முன்வைத்தார். எனினும், இந்த யோசனை தொடர்பில் நாம் இதுவரையில் எந்த முடிவுகளையும் எடுக்கவில்லை.

ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைகள் இடம்பெறக்கூடாது, இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசிக்கக்கூடாது என்பது எமது நிலைப்பாடாகும். ஆனால், இந்திய மீனவர்களுக்கு சற்று இடமளிக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாகவுள்ளது.

அனைவருக்கும் அனுமதி வழங்கா விட்டாலும் குறிப்பிட்ட சிலருக்கு அனுமதிப்பத்திர முறைமையின் கீழ் அனுமதியை வழங்குமாறும் இதனால் பாதிக்கப்படும் இலங்கை மீனவர்களுக்கு இந்தியாவால் வழங்கப்படும் கொடுப்பனவுகளை கொண்டு நஷ்டஈட்டை
வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்படுகிறது. இந்த யோசனை தொடர்பில் எவ்வித உடன்படிக்கையும் எட்டப்படவில்லை – என்றார்.

Share This Article