கொழும்பில் ஒரே சூலில் 06 குழந்தைகள்!

editor 2

கொழும்பு, காசல் வீதி மகளிர் போதனா வைத்தியசாலையில் பெண்ணொருவர் ஒரே சூலில் 6 குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

ஹம்பகா மாவட்டம் ராகமை பகுதியில் வசிக்கும் பெண்ணொருவரே இந்த 6 குழந்தைகளையும் பிரசவித்துள்ளதாக அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஜித் தன்தநாராயண தெரிவித்துள்ளார்.

அத்துடன், தாயும் குழந்தைகளும் நலமுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இறுதியாக ஒரே சூலில் 6 குழந்தைகளை பிரசவித்துள்ள சம்பவம் 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் 21ஆம் திகதி பதிவாகியிருந்தது.

படம் – ரூபவாஹினி

Share This Article