காங்கேசன்துறை – நாகை படகுப் பயணம் இறுதி நேரத்தில் இடைநிறுத்தம்!

editor 2

நாளை தொடக்கம் காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த படகுப் பயணம் இறுதி நேரத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த அறிவிப்பு பயணிகளுக்கு இன்று மாலை கிடைத்ததாக நாளை பயணத்திற்க தயாராகியிருந்த பயணிகள் தெரிவித்துள்ளனர்.

தொழில்நுட்பச் சிக்கல் காரணமாக குறித்த நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ள போதிலும் 12 ஆம் திகதி படகுப் பயணம் தொடங்கும் என்றும் நாகபட்டினத்திலிருந்து காங்கேசன்துறை நோக்கியதாக அந்தப் பயணம் இடம்பெறும் என்று தமக்கு அறிவிக்கப்பட்டதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

Share This Article