மட்டக்களப்புப் போராட்டக் களத்தில் தள்ளுமுள்ளு! (படங்கள்)

editor 2

மட்டக்களப்பு மாாவட்டம் மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தினை தடுத்து நிறுத்துவதற்கு பொலிஸார் முயன்ற நிலையில் அங்கு குழப்ப நிலை ஏற்பட்டது.

மட்டக்களப்பில் கொம்மாதுறையில் இன்று காலை முதல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் போராட்டக்காரர்கள் பேரணியாக நகர்ந்தனர்.
இதன் போது அங்கு குவிக்கப்பட்டிருந்த பெருமளவான பொலிஸார் போராட்டக்காரர்களை அங்கிருந்து அகற்றுவதற்கு முயன்றனர்.

இதன் போது தள்ளு முள்ளு ஏற்பட்டது.

முன்னதாக மக்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பிரமுகர்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பின்னர்,

தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பா.அரியநேத்திரன்,யோகேஸ்வரன் உட்பட்டவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் இணைந்து தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.

Share This Article