வியாழன் நாடு திரும்புகிறார் பஸில்?

வியாழன் நாடு திரும்புகிறார் பஸில்?

editor 2

பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ நாடு திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, எதிர்வரும் வியாழக்கிழமை அவர் நாடு திரும்பவுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், அமெரிக்காவுக்குச் சென்ற பஸில் ராஜபக்ஷ அங்கேயே தங்கியிருந்தார்.

இந்நிலையிலேயே அவர் நாடு திரும்பவுள்ளார். எவ்வாறாயினும், அவர் நாடு திரும்பிய பின்னர் மீண்டும் அரசியல் நடவடிக்கைகளைத் தொடங்குவாரா இல்லையா என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Share This Article