கையடக்கத் தொலைபேசிப் பாவனை; குழந்தைகளுக்கு அபாய எச்சரிக்கை!

editor 2

கையடக்க தொலைபேசி மற்றும் இணையம் ஆகியவற்றின் அதிகபயன்பாடு காரணமாக குழந்தைகளுக்கு ஞாபக மறதி ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக மருத்துவர் ரூமி ரூபன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

குழந்தைகள் வெகுவாக இணையக் காணொளியில் விளையாட்டுகளுக்கு அடிமையாகின்றனர்.

இணையக் காணொளி விளையாட்டுப் போட்டிகளில் குழந்தைகள் தீவிரமாக அவதானம் செலுத்துவதால் மனநல நோய்க்கு உள்ளாகின்றனர்.

இதனால் பிள்ளைகள்கல்வியில் தோல்வியடைந்து பெற்றோரை எதிரிகளாக நோக்குகின்றனர்.

இதனால் குழந்தைகளின் எதிர்காலம் முற்றாக அழிந்துவிடும்.

எனவே குழந்தைகளுக்கு இயன்றவரை கையடக்க தொலைபேசியைவழங்குவதை பெற்றோர் தவிர்த்துக் கொள்ளவேண்டும்-என்றார்.

Share This Article