மட்டக்களப்பின் பிரபல பாடசாலைகளில் ஒன்றான புனித மிக்கேல் கல்லூரி மாணவனான தேவேந்திரன் மதுசிகன் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
நேற்று அதிகாலை ஒரு மணியளவில் தனுஷ் கோடியிலிருந்து தலை மன்னாரை நோக்கி நீந்த ஆரம்பித்த மதுசிகன் 14 மணி நேரம் நீந்தி – பிற்பகல 03.05 மணியளவில் தலைமன்னாரை சென்றடைந்தார்.
தலை மன்னாரை வந்தடைந்த மதுசிகனை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன், மட்டக்களப்பு மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்கள், மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்க பிரதிநிதிகள், உட்பட பலரும் வரவேற்று பாராட்டுகளையும் வாழ்த்துக ளையும் தெரிவித்தனர்.