புரட்சிப் பாடலாசிரியர் பண்டிதர் வீ.பரந்தாமன் காலமானார்!

புரட்சிப் பாடலாசிரியர் பண்டிதர் வீ.பரந்தாமன் காலமானார்!

editor 2

ஈழத்தின் புரட்சி பாடல்கள் பல வற்றை எழுதிய பண்டிதர் வீரகத்திப்பிள்ளை பரந்தாமன் நேற்று சனிக்கிழமை புலோலியில் காலமானார்.

‘மானம் ஒன்றே வாழ்வெனக் கூறி வழியில் நடந்தான் மாவீரன்…’ , ‘நெஞ்சினில் நெருப் பேந்தி வாருங் கள்…’ , ‘கோண மலை எங்கள் ஏணைமலை…’ , ‘போடு போடு வீரநடை போடு…’ உட்பட பல பாடல்களை எழுதியுள்ளார்.

1968ஆம் ஆண்டு முதல் மனிதரும் கடவுளும், கெரில்லா போர் விரகுகள், வேரடி வழித் தமிழ் சொற்பிறப்பியல் சிற்றகர முதலி, தமிழ்ப் பெயர் கையேடு மக்கட் பெயர் 46,000, அருகி வரும் பழந்தமிழ் பேச்சு வழக்கு சொற்பிறப்பியல் அகராதி என பல நூல்களை அவர் எழுதியும் தொகுத்தும் வெளியிட்டுள்ளார். கிளிநொச்சி கவின் கலை கல்லூரியையும் இவர் நிறுவியிருந்தார்.

யாழ்ப்பாணம் – வடமராட்சி – புலோலியை பிறப்பிடமாகக் கொண்ட பண்டிதர் பரந்தாமன் ஆசிரியராக பணியாற்றியிருந்தார். தமிழரின் விடுதலைபோருக்கு பெரும் பங்காற்றிய அவர் நீண்டகாலம் வன்னியில் வாழ்ந்திருந்தார்.

கடவுள் மறுப்புக் கொள்கை கொண்ட அவரின் இறுதி நிகழ்வு சாதாரணமாக நடைபெறும் என்றும் புலோலியில் திங்கட் கிழமை (16) காலை 08 மணிக்கு நடைபெறும் என்றும் குடும்பத்தார் அறிவித்துள்ளனர்.

Share This Article