யாழ்ப்பாணத்தில் வன்முறைக் கும்பல் ஒன்று இளைஞர் மீது மேற்கொண்ட வாள்வெட்டு தாக்குதலில், அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏழாலைப் பகுதியை சேர்ந்த இளைஞர் மீது , இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் கொண்ட வன்முறைக் கும்பல் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில்
விசாரணைகளை முன்னெடுத்த சுன்னாகம் பொலிஸார், வாள்
வெட்டு தாக்குதலை மேற்கொண்ட குற்றச்சாட்டில் ஒருவரை கைது செய்துள்ளனர்.
ஏனைய மூவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கையை எடுத்துள்ள பொலிஸார், தாக்குதல் முன் பகை காரணமாக இடம் பெற்றதாக தெரிவித்தனர்.