கொரோனா பரவல் குறித்து வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் வைத்திய நிபுணர் அதுல லியனபத்திரன தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
தற்போது பரவிவரும் கொரோனா திரிபுகளுக்கு கடுமையான நோய் நிலைமைகளை ஏற்படுத்தக்கூடிய இயலுமைகள் கிடையாது.
2023ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னர், கொரோனா தொற்றை சாதாரணமாக ஒரு சுவாச நோயாக உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது.
சாதாரண சுவாச நோய்க்கான அறிகுறிகள் மற்றும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துவதைக் காட்டிலும், வேறு எந்த அறிகுறிகளையும் கொண்டிராதமையினால் சுவாச நோய்களில் ஒன்றாக கொரோனா
வகைப்படுத்தப்படுகிறது.
எனவே, சுவாச நோய்களைக் கொண்டிருக்கும் ஒருவர், சுவாசிப்பதில் சிரமத்தை
எதிர்கொண்டால் மாத்திரமே மருத்துவ சிகிச்சைகளைப் பெறுவது பொருத்தமானதாக இருக்கும் – என்றார்.