காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டுள்ள புதிய எரிபொருள் களஞ்சியசாலையின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி கலந்துகொண்டு எரிபொருள் களஞ்சியசாலையைத் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா, தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், சண்முகநாதன் சிறிபவானந்த ராஜா, பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகள் என பலர் கலந்து
கொண்டனர்