இணுவில் திண்மக் கழிவகற்றல் நிலையத்துக்கு எதிராக யாழில் போராட்டம்!

இணுவில் திண்மக் கழிவகற்றல் நிலையத்துக்கு எதிராக யாழில் போராட்டம்!

editor 2

காரைக்கால் திண்மக் கழிவகற்றல் நிலையத்திற்கு எதிராக யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்றைய திங்கட்கிழமை காலை போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ”சட்டவிரோதமாக திண்மக் கழிவகற்றல் அமைக்கப்பட்டு இரசாயன இலத்திரனியல் மருத்துவ கழிவுகளை வகைப்படுத்தாது தீயிட்டுக் கொழுத்தபடுவதால் சூழல் மாசடைவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கவலை தெரிவித்தனர்.

அத்துடன் குறித்த பகுதி ”சித்தர்கள் பலர் வாழ்ந்து சமாதியடைந்த இடமாகக் கருதப்படுவதாகவும், சமாதி கோவில், ஈழத்து சிதம்பரம் என அழைக்கப்படும் காரைக்கால் சிவன் கோவில் ஆகியன இங்கு காணப்படுவதாகவும் இப் புண்ணிய பூமியிலேயே இவ்வாறு கழிவுகள் கொட்டப்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்திருந்தனர்.

மேலும் குறித்த பகுதியில் இருந்து கழிவகற்றல் நிலையத்தை அகற்றுமாறு பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகின்ற போதிலும் இது வரையில் உரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விடயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

Share This Article