நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்போது, நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் மேல், சப்ரகமுவ மற்றும் வடக்கு மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும்.
வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.