தரம் 05 பரீட்சையை ரத்து செய்வது தொடர்பில் இன்னும் தீர்மானம் இல்லை – பிரதமர்!

தரம் 05 பரீட்சையை ரத்து செய்வது தொடர்பில் இன்னும் தீர்மானம் இல்லை - பிரதமர்!

editor 2

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை ரத்து செய்வது குறித்து அரசாங்கம் இன்னும் தீர்மானம் எதனையும் எட்டவில்லை என, பிரதமரும் கல்வியமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, பிரதமர் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

கால மாற்றத்துக்கு ஏற்ப கல்வித்துறையில் பல மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். 

புலமைப்பரிசில் பரீட்சையை தற்போது ரத்து செய்வதற்குத் தீர்மானம் எடுக்கவில்லை என்பதுடன், புதிய மறுசீரமைப்புடன் இணைந்ததாக அதனைச் செயற்படுத்த நாம் எதிர்பார்த்துள்ளோம். 

எனினும், தற்போது புலமைப்பரிசில் தொடர்பான அழுத்தத்தைக் குறைக்க சில நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம். 

2028 அல்லது 2029 ஆம் ஆண்டுக்குள் அதனைச் செயல்படுத்த முடியும் என எதிர்பார்த்துள்ளதாகப் பிரதமர் ஹிரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

Share This Article