பூநகரியில் இளைஞர் கொலை; நீதி கோரி மக்கள் போராட்டம்!

பூநகரியில் இளைஞர் கொலை; நீதி கோரி மக்கள் போராட்டம்!

editor 2

பூநகரியில் வாள்வெட்டு தாக்குதலில் கொல்லப்பட்ட இளைஞனின் மரணத்துக்கு நீதி கோரி, அவரின் இறுதி ஊர்வலத்தில் மக்கள் கவனவீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த சனிக்கிழமை பூநகரி – செம்மன்குன்றை சேர்ந்த க. பிரணவன் இனந்தெரியாத நபர்களால் வாளால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

இவரின், இறுதிச் சடங்கு நேற்று நடைபெற்றது. இளைஞனின் இறுதி ஊர்
வலம் நடந்தபோது, அதில் பங்கேற்றவர்கள், ‘வாள் வெட்டுக் குழுக்களை சட்டத்தின் முன் நிறுத்துங்கள்’, ‘உயிரை பறித்த வரை ஒருபோதும் மன்னிக்காதே’, ‘போதையை கூண்டோடு ஒழிப்போம்’, என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

அத்துடன், குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மனு ஒன்றும் பூநகரி பொலிஸாரிடம் வழங்கப்பட்டது.

இதேவேளை, இந்தக் கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற
சந்தேகத்தில் நால்வர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

Share This Article