இலங்கையில் இஸ்ரேலியர்கள் தங்கள் வழிபாட்டு நிலையங்கள் நான்கை உருவாக்கியுள்ளனர் என தெரிவித்துள்ள மதவிவகாரங்களிற்கான அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி இவற்றில் இரண்டினை அவர்கள் அனுமதி பெறாமல் அமைத்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
பொத்துவில் மற்றும் கொழும்பு திம்பிரிகசாயவில் உள்ள யூதவழிபாட்டு நிலையங்கள் அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொழும்பு 7 மற்றும் தெகிவளையில் அனுமதி பெறாமல் உருவாக்கப்பட்ட யூதமத நிலையங்களிற்கு அரசாங்கம் தொடர்ந்தும் விசேட அதிரடிப்படையினரினதும் பொலிஸாரினதும் பாதுகாப்பை வழங்குகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் குற்றம்சாட்டியுள்ளார்.