இரண்டு வருடங்களின் பின்னர், கொழும்பு இரத்மலானை மற்றும் யாழ்ப்பாணம் இடையிலான சேவை நேற்று முதல் வழமைக்கு திரும்பியுள்ளது.
தகுதிகாண் விமான சேவை நேற்று டேவிட் பீரிஸ் விமான சேவை நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்டது.
2023 ஆம் ஆண்டுடன் இடைநிறுத்தபட்ட விமான சேவையானது, மீண்டும் டேவிட் பீரிஸ் விமான சேவை நிறுவனத்தின் மூலம் இலங்கை விமான சேவைகள் அதிகார சபைக்கு விண்ணப்பிக்கபட்ட விண்ணப்பத்தை பரிசீலிக்கும் முகமாக
தகுதி காண் சேவை இடம்பெற்றது.
இந்த சேவையின் மூலம் 11 பயணிகள் பயணம் செய்ய முடியும் என்பதுடன் ஒரு மணித்தியாலம் 10 நிமிடங்களில் இரத்மலானையை சென்றடைய எதிர்பார்க்கப்படுகின்றது.