இந்தியாவின் தமிழகத்தில் ஏதிலியாக இருந்து நாடு திரும்பிய நிலையில் பலாலியில் வைத்துக் கைது செய்யப்பட்ட நபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 29ஆம் திகதி கைது செய்யப்பட்ட அவரை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்தநிலையில் இன்றைய தினம் அவருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளதாக நீதிமன்றத் தகவல்கள் தெரிவித்தன.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் தமது எக்ஸ் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் பிமல் ரத்னாயக்க, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் பணிப்புரைக்கு அமைய குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகள் இன்று மன்றில் முன்னிலையாகி சமர்ப்பணங்களை முன்வைத்ததாகத் தெரிவித்துள்ளார்.