அண்மையில் ஓமந்தைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரகத்தின் அதிகாரி பிரபாகரனின் மகனும் உயிரிழந்துள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபாகரன் அக்க்ஷை என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி இன்று இரவு 8.00 மணியளவில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.
விபத்தில் உயிரிழந்த பிரபாகரனின் மனைவி தொடர்ந்தும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.