முன்னாள் அமைச்சர்களுக்கு சிறைச்சாலையில் அச்சகப் பிரிவில் பணி!

முன்னாள் அமைச்சர்களுக்கு சிறைச்சாலை அச்சகப் பிரிவில் பணி!

editor 2

நீதிமன்றத்தால் கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மகிந்தானந்த அளுத்கமகே, நளின் பெர்ணான்டோ ஆகியோருக்கு வெலிக்கடை சிறைச்சாலையில் அச்சக பிரிவில் பணி வழங்கப்பட்டுள்ளது.

ஆயுள் தண்டனை கைதிகள், மற்றும் கொலை, பாலியல் வன்புணர்வு குற்றக் கைதிகளும் அடைக்கப்பட்டுள்ள பகுதியிலிருந்து இருவரையும் பிரித்து வைத்துள்ளதாகவும் தெரிய வருகிறறது. இருவரின் பாதுகாப்பையும் கருத்தில்
கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைக்கு தேவையான ஆவணங்களை இந்த அச்சகப் பிரிவே அச்சிட்டு
வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article