அரியாலை மனிதப் புதைகுழியில் ஐந்து எலும்புக் கூடுகள் மீட்பு!

அரியாலை மனிதப் புதைகுழியில் ஐந்து எலும்புக் கூடுகள் மீட்பு!

editor 2

யாழ்ப்பாணம் – அரியாலை மனிதப் புதைகுழியில் இதுவரை 05 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அரியாலை, சித்துப்பாத்தி மயானத்தில் ஒரு குழியில் மனித எச்சங்கள்
கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கமைய அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

ஆரம்பத்தில் இரண்டு எலும்புக்கூடுகள் கண்டு கொள்ளப்பட்டதை
அடுத்து நேற்று அகழ்வு பணிகள் மீண்டும் முன்னெடுக்கப்பட்டன.

நேற்றைய அகழ்வு பணியுடன் 5 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதேநேரம்,

மேலும் பல எலும்புக்கூடுகள் இருப்பதற்கான சாத்தியக்
கூறுகள் தென்படுகின்றன என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.

Share This Article