குமுழமுனையில் கேணிக்குள் வீழ்ந்த மாணவிகள் இருவர் மரணம்!

முல்லைத்தீவு குமுழமுனையில் கேணிக்குள் வீழ்ந்த மாணவிகள் இருவர் மரணம்!

editor 2

முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைபற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட குமுழமுனை கொட்டுக்கிணற்றடிப் பிள்ளையார் ஆலய கேணிக்கு இன்றையதினம் (01.06.2025) மாணவிகள் மூவர் சென்ற நிலையில் மாணவிகள் இருவர் ஆலய கேணிக்குள் தவறி விழுந்த நிலையில் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மாணவிகளில் இருவர் கேணிக்குள் புகைப்படம் எடுப்பதற்காக இறங்கிய வேளை இருவரும் கேணிக்குள் தவறி விழ்ந்துள்ளனர் . அதனையடுத்து மற்றைய மாணவியின் கதறல் சத்தம் கேட்டநிலையில் குமுழமுனை இளைஞர்களால் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இரு மாணவிகளும். பூதன்வயல் மாமூலை பகுதியில் வசிக்கும் வித்தியானந்த கல்லூரியில் தரம் 10 இல் கல்விகற்கும் றஸ்மிலா ,

கிருசிகா எனும் இரு மாணவிகேளே உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article