பூநகரியில் இளைஞர் வெட்டிக் கொலை!

பூநகரியில் இளைஞர் வெட்டிக் கொலை!

editor 2

கிளிநொச்சி – பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிராய் குளத்தை அண்டிய பகுதியில், நேற்று (31) மாலை 6.30 அளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் மீது சிலர் வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

வாள் வெட்டுக்கு இலக்கான இளைஞன் சம்பவ இடத்திலே உயிரிழந்ததாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

உயிரிழந்த நபர் பூநகரி, செம்பங்குன்று பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக, கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share This Article