அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள அடையாளப் பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கிறது.
நேற்று முன்தினம் (28) நள்ளிரவு முதல் 48 மணிநேர அடையாளப் பணிப்புறக்கணிப்பை குறித்த சங்கம் முன்னெடுத்துள்ளது.
ஆட்சேர்ப்பு செயன்முறையில் ஏற்பட்டுள்ள தாமதத்தினை நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகிறது.
அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு காரணமாக மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.