யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு புதிதாக தாதியப் பரிபாலர்கள் இருவரும், தாதிய உத்தியோகத்தர்கள் 268 பேரும் நேற்று புதன்கிழமை
முதல் நியமனம் பெற்றுள்ளனர்.
தாதிய பரிபாலர்களுக்கான வெற்றிடங்கள் ஐந்து இருக்கின்றபோதும் இரண்டு நியமனங்களே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே சேவையில் உள்ள தாதிய உத்தியோகத்தர்களில் 168 பேர் வருடாந்த இடமாற்றம் பெற்றுச் செல்லவுள்ள நிலையில், புதிதாக வருகை தந்தவர்களில் 60 பேர் தமிழ்மொழி சார்ந்தவர்களாகவும் ஏனைய அனைவரும் சிங்கள பேசுபவர்களாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
யாழ் போதனா வைத்திய சாலைக்கு நியமனம் பெற்று வந்த புதிய தாதிய உத்தி
யோகத்தர்களை வரவேற்கும் நிகழ்வு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.