இலங்கை அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பில் உயிரிழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக, கனடா பிரம்டன் நகரில் திறந்துவைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத் தூபி சேதப்படுத்தப்பட்டுள்ளது.
பிரம்டன் நகரில் சிங்காவுசி பூங்காவில் தமிழின அழிப்பு நினைவுத்தூபி கடந்த 10ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
தமிழின அழிப்பு நினைவகம் என்ற பெயரில் அமைந்துள்ள இந்த நினைவுத்
தூபியை பிரம்டன் மேயர் பற்றிக் பிரவுண் உத்தியோகபூர்வமாக திறந்து
வைத்தார்.
இந்நிலையில் இந்த நினைவகம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவுக்கு பின்னர் சேதப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரியவருகிறது. தமது முகங்களை மூடியவாறு அங்கு வந்தவர்கள் நினைவகத்தை சேதப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பீல் பிராந்திய பொலிஸில் முறையிடப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் இதுவரை சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
எனினும், அங்கு பொருத்தப் பட்ட சி. சி. ரீ. வி. கமெராக்களின் உதவியுடன் சந்தேகநபர்கள் வெகு விரைவில் கைது செய்யப்படுவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.