மட்டக்களப்பில் வேட்பாளர்கள் இருவர் உட்பட்ட மூவர் கைது!

மட்டக்களப்பில் வேட்பாளர்கள் இருவர் உட்பட்ட மூவர் கைது!

editor 2

மட்டக்களப்பு மாவட்டம் – ஏறாவூர், வாழைச்சேனை பிரதேசங்களில் தேர்தல் நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்த ஜக்கிய மக்கள் சக்தி, ஜக்கிய தேசிய கட்சிகளை கொண்ட இரு வேட்பாளர்கள் உட்பட மூவரை செவ்வாய்க்கிழமை (6) கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டுமாவடி அந்நூர் பாடசாலையில வாக்களிப்பு நிலையத்துக்கு அருகில் ஒரு கட்சியின் வேட்பாளர் அரவது ஆதரவாளர் உட்பட இருவர் வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்க விடாது இடையூறு விளைவித்ததையடுத்து வேட்பாளர் மற்றும் ஆதரவாளரை பொலிஸார் கைது செய்தனர்.

அதேவேளை, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மீராங்கேணி வாக்களிப்பு நிலையத்துக்கு சென்ற ஜ.தே.கட்சி வேட்பாளர் ஒருவர் சென்று தமது கட்சிக்கு வாக்களிக்குமாறு கோரி வாக்களிப்புக்கு இடையூறு விளைவித்த வேட்பாளரை கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

Share This Article