முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் உத்தியோகபூர்வ வாகனங்களின் எண்ணிக்கை, மாதாந்த எரிபொருள் கொடுப்பனவை குறைப்பதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கை ஜனாதிபதியின் செயலாளரால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை இரண்டாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமையகூடுதலாக பெற்ற அனைத்து வாகனங்களையும் உடனடியாக
ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைக்குமாறு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒரு முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்படும் மாதாந்த எரிபொருள் கொடுப்பனவை 900 லீற்றராக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது முன்னர், 2 ஆயிரத்து 250 லீற்றராகக் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.