கடந்த பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டமைக்கு நிபுணர்கள் குழு காரணத்தை கண்டுபிடித்துள்ளது.
இதன்படி, சூரிய மின்கலங்கள் மூலம் தேசிய மின் கட்டமைப்புக்கு வழங்கப்படும் மின்சாரத்தின் அளவு அதிகரித்தமையால் தேசிய மின் கட்டமைப்பின் நிலைத் தன்மை குறைந்து மின் தடை ஏற்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின் தடைக்கான அறிக்கையை சமர்ப்பித்து அந்தக் குழு இதனை வெளிப்படுத்தியுள்ளது. இந்த குழுவின் முழு அறிக்கையும் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இணையதளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.