வவுனியாவில் காணாமல் போன இளைஞரின் சடலம் இரத்தக் கறையுடன் மீட்பு!

வவுனியாவில் காணாமல் போன இளைஞரின் சடலம் இரத்தக் கறையுடன் மீட்பு!

Editor 1

வவுனியாவில் குளத்தின் அலைகரைப் பகுதியில் இருந்து இரத்த கறைகளுடன் மீட்கப்பட்ட இளைஞனின் சடலத்தை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

சட்ட வைத்திய அதிகாரி வராமையால் தாமதம் ஏற்பட்டுள்ளது.

வவுனியா, பாவற்குளத்தின், சூடுவெந்தபுலவு அலைகரைப் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் மாலை இளைஞர் ஒருவரின் சடலம் இரத்தக் கறை காயங்களுடன் மீட்கப்பட்டிருந்தது.கடந்த புதுவருட தினமன்று காணாமல் போயிருந்த வவுனியா விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த கோபிதாசன் என்ற 33 வயது நபரே சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த சடலத்தை நேற்று முன் தினம் மாலை பார்வையிட்ட பதில் நீதவான் அன்ரன் புனிதநாயகம், சடலத்தை உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டதுடன், சம்பவம் தொடர்பான துரித விசாரணைகளை முன்னெடுக்குமாறும் பொலிசாருக்கு பணித்தார். வவுனியா வைத்தியசாலையின் பிணவறையில், குளிரூட்டிகள் பழுதடைந்த நிலையில் காணப்படுவதால், குறித்த சடலம் செட்டிகுளம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், வவுனியா வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி வராமையால சடலம் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்படாது, செட்டிகுளம்
வைத்தியசாலையின் பிரேத அறையில் தொடர்ந்தும் வைக்கப்பட்டுள்ளதாக இறந்தவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

Share This Article