யாழ்ப்பாணத்தில் வீதியோரமாக நின்று நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தவரை வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்
மோதியதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வல்வெட்டித்துறை ஆதி கோவிலடியைச் சேர்ந்த இரத்தினவடிவேல் இரவீந்திரன்
(வயது 65) என்பவரே உயிரிழந்தார்.
கடந்த 11 ஆம் திகதி தனது வீட்டுக்கு அருகில் சைக்கிளை வீதியோரமாக நிறுத்தி
நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தவேளை மிக வேகமாக வந்த மோட்டார்
சைக்கிள், வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக நின்றவரை மோதித் தள்ளியது.
அதில் குறித்த நபரும் மோட்டார் சைக்கிளில் வந்த இருவருமாக மூவரும்
காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த
நிலையில், நேற்று முன்தினம் திங்கட்கிழமை சிகிச்சை பலனின்றி இரவீந்திரன்
உயிரிழந்துள்ளார்.