மேஜர் பதவிக்குக் கீழுள்ள அனைத்து இலங்கை இராணுவத்தினரும் தங்களது கடவுச்சீட்டை அந்தந்த படைப்பிரிவுகளிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு இராணுவ ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இராணுவத்தின் செய்தித் தொடர்பாளரை எமது செய்தி சேவை தொடர்பு கொண்டபோது, இராணுவத்தினரின் அமைதி காக்கும் கடமைகள் மற்றும் வெளிநாட்டுப் பயிற்சியை விரைவுபடுத்துவதற்கான திட்டத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.