தற்போதைய மழையால் இரணைமடு குளத்தின் நீரி அதிகரித்து வருகிறது. எனவே, குளத்தின் வாயில்களைக் கூடுதலாக திறக்க திட்டமிடப்பட்டுள்ளோம் என்று கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவு அறிவித்துள்ளது.
தற்போது இரணைமடு குளம் இயற்கையாகவே வான் பாய்வதுடன் 8 வாயில்களை சிறிய அளவில் திறந்துள்ள நிலையில் உள்ளது. இருப்பினும், நீர்மட்டத்தை குறைக்க வாயில்களை மேலும் திறக்க வேண்டியது அவசியமாக உள்ளது.
அதனால், மக்கள், குறிப்பாக அய்யன் கோவிலடி, முரசுமோட்டை, கண்டாவளை, ஊரியன், பனாங்கண்டி மற்றும் கனகராயன் ஆற்றின் அருகிலுள்ள மக்கள், நிலைமையை கவனத்தில் கொள்ளுங்கள். வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் உடனடியாக கிராம சேவகரை தொடர்பு கொண்டு பாதுகாப்பு மையங்களுக்கு நகர்ந்து செல்லவும்.
என்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவு அறிவித்துள்ளது.