கிளிநொச்சியில் விபத்து! குடும்பஸ்தர் மரணம்!

கிளிநொச்சியில் விபத்து! குடும்பஸ்தர் மரணம்!

editor 2

கிளிநொச்சி, தருமபுரம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கண்ணகி நகர் பகுதியில் நேற்று காலை விபத்து இடம்பெற்றுள்ளது.

ஆடை தொழிற்சாலைப் பணியாளர்களை ஏற்றி கிளிநொச்சி நோக்கிப் பயணித்த பஸ்ஸூடன் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் தலைக் கவசமின்றி பயணித்த நிலையில் அவர் அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளார்.

விபத்தில் தர்மபுரம், குமாரசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான ராஜேந்திரன் கௌதமன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் பஸ்ஸின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தருமபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர

Share This Article