ராஜபக்ச குடும்பம் மீதான குற்றச்சாட்டை ஜனாதிபதி நிரூபிக்க வேண்டும் – நாமல்!

ராஜபக்ச குடும்பம் மீதான குற்றச்சாட்டை ஜனாதிபதி நிரூபிக்க வேண்டும் - நாமல்!

editor 2

ராஜபக்ச குடும்பத்தினர் உகண்டாவிலும் வேறு பல நாடுகளிலும் மில்லியன் கணக்கான டொலர்களை மறைத்துவைத்திருக்கின்றனர் என்ற தனது குற்றச்சாட்டுகளை ஜனாதிபதி நிரூபிக்கவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் நிதி களவாடப்பட்டுள்ளது என ஜனாதிபதியும் அவரது குழுவினரும் பல ஆண்டுகளாக தெரிவித்துவருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தனது குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான தருணம் இது என அவர் தெரிவித்துள்ளார்.

Share This Article