4 ஆயிரம் அரச வாகனங்களைக் காணவில்லையாம்!

4 ஆயிரம் அரச வாகனங்களைக் காணவில்லையாம்!

editor 2

சுகாதாரம், கல்வி , தபால் , நீர்ப்பாசனம் மற்றும் ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட அரச திணைக்களங்களின் சுமார் 4 ஆயிரம் வாகனங்கள் கடந்த தினங்களில் காணாமல் போயுள்ளன.

இது தொடர்பில் அரச வாகனங்கள் தொடர்பான விசேட கணக்காய்வை தேசிய கணக்காய்வு பணிமனை நேற்றுமுன்தினம் ஆரம்பித்துள்ளது.

விசாரணை முடிவில் அறிக்கை ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தின் கணக்காய்வாளர் டபிள்யூ . பி. சி. விக்கிரமரத்ன தெரிவித்தார்.

கொழும்பு காலிமுகத்திடல் மைதானத்தில் விட்டுச் செல்லப்பட்ட 110 அதிசொகுசு வாகனங்கள் தொடர்பில் ஆராய விசேட கணக்காய்வு குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழுவுடன் இணைந்து இந்த விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அவர், குறித்த வாகனங்களை உண்மையிலேயே பயன்படுத்தியவர்கள் யார் என்பதை ஆராய, தகவல் திரட்டும் விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சுகாதார அமைச்சுக்கு சொந்தமான ஆயிரத்து 794 வாகனங்கள் காணாமல் போயுள்ளன.

இதில், 649 கார்கள், ஆயிரத்து 115 மோட்டார் சைக்கிள்கள் அடங்கும்.

இதேபோன்று, கல்வி அமைச்சுக்கு சொந்தமான 212 வாகனங்களும் நீர்ப்பாசன திணைக்களத்துக்கு சொந்தமான 880 வாகனங்களும் தபால் திணைக்களத்துக்கு சொந்தமான 45 வாகனங்களும் மாயமாகியுள்ளன.

இந்த வாகனங்கள் தொடர்பில் தகவல் அறியப்படாததால் விசாரணைகள்
பெரும் சவாலானவையாக உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.

Share This Article